
சென்னை, ஜன. 15
தமிழரின் தன்மானம் தனித்தன்மையோடு திகழ, தமிழர்தம் வாழ்வில் வளம்
பெற்றிட, சர்வாதிகார ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர, தமிழர் திருநாளாம்
தைத் திருநாள் வழிவகுக்க வேண்டும். அனைவரது இல்லங்களிலும் அன்பும்,
அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால்போல் பொங்கி வழிய வேண்டும் என்றும்
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ?பொங்கல் திருநாள்?
நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செள்தி வருமாறு:
அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாட
இருக்கும் எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல்
திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்...