February 24, 2011

இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி புரட்சித்தலைவி அம்மாவுக்கு இன்று 63வது பிறந்த நாள்

சென்னை, பிப். 24
   இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள். இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை கழகத்தினர் ஏழை, எளிய மக்கள் பயனுற நல உதவிகள், அன்னதானம், ரத்த தானம் வழங்கி எழுச்சியோடு கொண்டாடுகிறார்கள்.

கழக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு  62 வயது முடிந்து இன்று 63வது வயது பிறக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக உடன்பிறப்புகளுக்கு ஏற்கெனவே வெளியிட்டிருந்த அன்பு வேண்டுகோளில், ?கருணாநிதியின் தன்னலம் காரணமாக, அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது என்றும்,
விண்ணை முட்டும் விலைவாசி, கடுமையான மின்வெட்டு, பெட்ரோல் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, குடிநீர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை, சாலை வசதியின்மை என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாக்கப் பட்டு இருக்கிறார்கள்.
இது தவிர, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, பதுக்கல், கொலை, கொள்ளை என அனைத்து சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.
அண்டை மாநிலங்களுடனான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. இலங்கை கடற்படையினரின் ஈவு இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள் காரணமாக மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டம்ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம், உலக அரங்கில் இந்திய நாட்டிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார் கருணாநிதி. இந்த ஊழல் மூலம் இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் கருணாநிதி குடும்பத்தினர் ஆபத்தை விளைவித்து இருக்கின்றனர் என்றும்,
எனவே, எனது பிறந்த நாளை கொண்டாடுவதை விட ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபடுவது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றும்,
பொதுவாக எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புவதில்லை. இருப்பினும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள், எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கருதினால், ஏழை, எளிய மக்களுக்கு துணிமணிகள் வழங்குதல், மருத்துவ சேவையாற்றுதல், அன்னதானம், ரத்ததானம், போன்ற நற்காரியங்களில் கழக உடன்பிறப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
குடும்ப ஆட்சி அழிந்து நல்லாட்சி அமையும் நாளே தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நாள் என்பதால், அனைத்து மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களையும் அந்த வெற்றித் திருநாளன்று வைத்துக் கொள்ளலாம் என்று கழக உடன்பிறப்புகளை அன்போடு கேட்டுக் கொண்டார்கள்".
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று இந்திய நாட்டின்  பேரொளியாம், தமிழகத்தை வழிநடத்தப்போகும் ஆற்றல் அரசியாம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 63வது பிறந்த நாளை ஏழை, எளிய, நலிந்த ஆதரவற்றோர் பயன்பெறும் வகையில் கொண்டாட கழக உடன்பிறப்புகள் சிறப்பான ஏற்பாடுகளை நாடெங்கிலும் செய்துள்ளனர்.
கழகம் மட்டுமல்லாமல் கழகத்தின் சார்பு அமைப்புகளான எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் பிரிவு, அண்ணா தொழிற்சங்க பேரவை, மகளிரணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, மீனவர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, விவசாய பிரிவு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை என ஒவ்வொரு அமைப்பும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என எல்லோருமே ரத்ததானம், இலவச வேஷ்டி, சேலை, தொழில் கருவிகள் வழங்குதல் முதலான நல உதவிகள் வழங்கவும் மாணவரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதரவற்ற பெண் களுக்கு தையல் இயந்தி ரங்கள், ஊனமுற்றோ ருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கவும், திருக் கோயில்கள், தேவாலயங் கள், பள்ளிவாயில்கள், தர்காக்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நோயின்றி நீடூழி வாழ சிறப்பு பூஜைகள் நடத்த கழக உடன்பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளான இன்று (24ந் தேதி) பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசுகள் வழங்கவும் கழக உடன் பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
கருணாநிதியின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியின் அவலங்களை நாட்டுமக்களுக்கு எடுத்துக்கூறி, அந்த கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று (24ந் தேதி) முதல் 28ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.
பிரிவு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை என ஒவ்வொரு அமைப்பும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என எல்லோருமே ரத்ததானம், இலவச வேஷ்டி, சேலை, தொழில் கருவிகள் வழங்குதல் முதலான நல உதவிகள் வழங்கவும் மாணவரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதரவற்ற பெண் களுக்கு தையல் இயந்தி ரங்கள், ஊனமுற்றோ ருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கவும், திருக் கோயில்கள், தேவாலயங் கள், பள்ளிவாயில்கள், தர்காக்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நோயின்றி நீடூழி வாழ சிறப்பு பூஜைகள் நடத்த கழக உடன்பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளான இன்று (24ந் தேதி) பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசுகள் வழங்கவும் கழக உடன் பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
கருணாநிதியின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியின் அவலங்களை நாட்டுமக்களுக்கு எடுத்துக்கூறி, அந்த கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று (24ந் தேதி) முதல் 28ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites