This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

July 20, 2010

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்

   சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவை விட படு வேகமாக தயாராகத் தொடங்கியுள்ளது அதிமுக. அதிமுக கூட்டணியில் புதிய கட்சியாக முதல் ஆளாக புதிய தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவருடன், புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண், அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர், மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ராமராஜ், வி.சுப்பிரமணியம், ஐயப்பன் ஆகியோர் இருந்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள...

July 08, 2010

கோடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார்கள் அம்மா அவர்கள்

கோத்தகிரி கோடநாட்டில் தங்கியிருந்த அம்மா, தோழி சசிகலா அவர்களுடன், நேற்று சென்னை திரும்பினார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள், தோழி சசிகலாவுடன், கடந்த 18ம் தேதி கோத்தகிரி கோநாடு எஸ்டேட்டுக்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். நேற்று காலை 10.00 மணியளவில் எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்பட்ட அம்மா ., வழக்கத்துக்கு மாறாக, எஸ்டேட் சாலை சந்திப்புக்கு வந்து அ.தி.மு.க.,வினர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட செயலர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மில்லர், அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், குன்னூர் தொகுதி செயலர் மாதன், ஊட்டி நகர செயலர் தேவராஜ், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் வினோத், ஜெ., மாவட்ட முன்னாள் பேரவை...

July 07, 2010

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை: ஜெயலலிதா விளக்கம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள்  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கை பிரச்னையில், ‘போர் நடக்கும்போது பொது மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது’ என்று நான் தெரிவித்தது உண்மைதான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால், வேண்டுமென்றே போரின்போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னர், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததையும் ஒப்பிட்டு கருணாநிதி பேசுகிறார். நான் குறிப்பிட்டது தவிர்க்க முடியாததைத்தான். கடந்த...

July 02, 2010

முதல்வர் கருணாநிதி போர்க் குற்றவாளி:

"ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அவர்களை அ.தி.மு.க., குழு சந்தித்து, "கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி' என பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும்' என, அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடந்த உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் தலைமையில், மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழர்களை தமிழக அரசும், அதன் முதல்வருமான கருணாநிதியும் கைவிட்டுவிட்ட நிலையில், பான் கி மூன் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழுவுக்கு விசா தருவதை, இலங்கை அரசு தனது இயல்புக்கு ஏற்ப மறுத்து வருகிறது. ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால்,...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites