December 04, 2009

வேதாரண்யம் விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க ஜெயலலிதா கோரிக்கை,

வேதாரண்யம் அருகே தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியை,9 குழந்தைகள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி 20 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்திகளை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பள்ளி,கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.அவற்றை பள்ளி,கல்லூரி நிர்வாகங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை திமுக அரசு கண்காணிக்காததும்,பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாக எந்த வித பராமரிப்புமினறி கிடப்பதும் தான் இது போன்ற சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணம்.விதிகளை மீறும் பள்ளி,கல்லூரி நிர்வாகத்தின் மீதும்,வாகன உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேதாரண்யத்தில் எற்பட்ட விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும்,படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்கள்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites