திருநெல்வேலி : நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.
அந்த கடைசி நிமிடம் வீடியோ காட்சியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் :
எஸ்.ஐ., படுகொலை
நன்றி தினமலர் நாளிதழ்
1 comments:
இரக்கம் அற்ற தி. மு.க. அமைச்சர் அவர்களே ( அவர்களே என்று சொல்வதுக்கு கூட என் நாக்கு கூசுகிறது) தாங்கள் ஆடை மற்றும் வெண்மையாக அணிந்தால் போதாது, மனதிலும் வெண்மையான தூய்மை, இரக்கம் இருக்க வேண்டும். உங்களுக்கும் உடன் பிறந்த பிறப்புகள் இல்லையா? ஏன் நாளைக்கு உங்களுகே கூட இந்த நிலைமை ஏற்படலாம் அல்லவா!!!!!!!!!!!!!!!!!!!!!! சிந்திப்பீர் சுய சிந்தனையுடன்!!!!!!!!!!!!!!!!!
Post a Comment