November 27, 2009

பாபர் மசூதி இடிப்பு சிதம்பரம் ?????


Swine Flu பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன், 17 ஆண்டுக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், கமிஷனின் முடிவுகள் படிக்க மட்டுமே பயன்படும். மதத்தில் அரசியல் புகுத்தப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதும் குறிப்பிடவில்லை. பல கோடி ரூபாய் செலவழித்து, 17 ஆண்டுக்கு பிறகு பெறப்பட்ட அறிக்கை, வெறும் சூட்டையும், தூசியையும்தான் கிளப்பி விட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, அறிக்கையின் சில பகுதிகள் எப்படி பத்திரிகைகளுக்கு கசிந்தன. இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவசர, அவசரமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை ராஜினாமா செய்ய கோருவது நியாயம். ஆனால், ‘அறிக்கை கசிந்தது துரதிருஷ்டவசமானது. உள்துறை அமைச்சகத்துக்கு வெளியில்தான் அது ஏற்பட்டிருக்கிறது’ என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்செக்ஸ் குறியீடு அபரிதமாக உயர்ந்தபோது தன் பொருளாதார கொள்கைதான் காரணம் என்று நிதி அமைச்சராக இருந்தபோது சொன்னார். வீழ்ச்சி ஏற்பட்டபோது சந்தை மீது பழி போட்டார். இதே முறையைதான், இப்போதும் சிதம்பரம் கடைபிடித்திருக்கிறார். கரும்பு விலை அவசர சட்டம், மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டம், முல்லை பெரியாறு பிரச்னை என முக்கியமான மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் லிபரான் அறிக்கை பின்னுக்கு தள்ளிவிட்டது. மத்திய அரசு மட்டும்தான் இந்த அறிக்கை கசிவின் மூலம் பயன் அடைந்துள்ளது. இது சூழ்ச்சியுடன் திட்டமிட்டு வெளியிடப்பட்ட கசிவு.

அறிக்கையின் ஒரே ஒரு நகல் மத்திய உள்துறை அமைச்சரிடம் மட்டும்தான் இருந்தது. எனவே, அறிக்கை கசிவுக்கு சிதம்பரம்தான் முழு பொறுப்பு என்பது வெளிப்படை. அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
நன்றி தினகரன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites