
அம்மா அவர்கள் 29.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினால் 'சிதம்பரம் மீது சீற்றம் ஏன்?என்று முதல்வர் கருணாநிதி என்னை கேட்டுள்ளார்.1992 ல் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் பாபர் மசூதி அப்படியே இருக்க வேண்டும் இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் என்று நான் தெள்ள தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.இதை வேண்டுமென்றெ மறைத்து அவர் அறிக்கை விட்டுள்ளார்.லிபரான் அறிக்கை கசிந்ததற்கு காரணம்,சிதம்பரம் என்பதால்தான் அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியெற்றப்பட வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.ஆனால் ஒரு சம்பவத்திற்காக...