This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

July 20, 2010

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்

   சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவை விட படு வேகமாக தயாராகத் தொடங்கியுள்ளது அதிமுக. அதிமுக கூட்டணியில் புதிய கட்சியாக முதல் ஆளாக புதிய தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவருடன், புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண், அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர், மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ராமராஜ், வி.சுப்பிரமணியம், ஐயப்பன் ஆகியோர் இருந்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள...

July 08, 2010

கோடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார்கள் அம்மா அவர்கள்

கோத்தகிரி கோடநாட்டில் தங்கியிருந்த அம்மா, தோழி சசிகலா அவர்களுடன், நேற்று சென்னை திரும்பினார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள், தோழி சசிகலாவுடன், கடந்த 18ம் தேதி கோத்தகிரி கோநாடு எஸ்டேட்டுக்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். நேற்று காலை 10.00 மணியளவில் எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்பட்ட அம்மா ., வழக்கத்துக்கு மாறாக, எஸ்டேட் சாலை சந்திப்புக்கு வந்து அ.தி.மு.க.,வினர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட செயலர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மில்லர், அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், குன்னூர் தொகுதி செயலர் மாதன், ஊட்டி நகர செயலர் தேவராஜ், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் வினோத், ஜெ., மாவட்ட முன்னாள் பேரவை...

July 07, 2010

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை: ஜெயலலிதா விளக்கம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள்  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கை பிரச்னையில், ‘போர் நடக்கும்போது பொது மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது’ என்று நான் தெரிவித்தது உண்மைதான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால், வேண்டுமென்றே போரின்போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னர், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததையும் ஒப்பிட்டு கருணாநிதி பேசுகிறார். நான் குறிப்பிட்டது தவிர்க்க முடியாததைத்தான். கடந்த...

July 02, 2010

முதல்வர் கருணாநிதி போர்க் குற்றவாளி:

"ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அவர்களை அ.தி.மு.க., குழு சந்தித்து, "கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி' என பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும்' என, அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடந்த உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் தலைமையில், மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழர்களை தமிழக அரசும், அதன் முதல்வருமான கருணாநிதியும் கைவிட்டுவிட்ட நிலையில், பான் கி மூன் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழுவுக்கு விசா தருவதை, இலங்கை அரசு தனது இயல்புக்கு ஏற்ப மறுத்து வருகிறது. ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால்,...

June 30, 2010

கோவையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில்

கோவையில்  அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅவர்கள்  தலைமையில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஜூலை 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ....

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில்

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம். ....

June 29, 2010

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க.,ஸ்டிரைக்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக் நடைபெறும் என அ.தி.மு.க., - ம.தி.மு.க., ஆகிய எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெ‌ண்ணெய் விலையை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் நடத்தப்போவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இது குறித்து ஜெயலலிதா, வைகோ உள்பட 7 கட்சித்தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அந்த அறிக்கையில் : பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல்...

தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

பெரியாறு, வைகை கரையோரங்களில் உள்ள கிணறுகள், பைப் லைன், மோட்டார்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். ....

ஆயுள் கைதிகளை விடுவித்தால் தேர்தலில் விபரீதம் ஏற்படும்: அம்மா அவர்கள்

சென்னை :"ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என, தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் விபரீதம் ஏற்படலாம்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது' என்று வேதனையுடன் சொன்னவர் அண்ணாதுரை. அவரது கொள்கைக்கு மாறாக, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கோடு, அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டே, 2008ம் ஆண்டு ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள் உட்பட 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்."மக்கள்...

June 28, 2010

அ.தி.மு.க., கூட்டத்தில் வன்முறை

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே அ.தி.மு.க., நடத்திய தெருமுனை பிரசாரத்தில் மர்ம கும்பல் கற்கள் மற்றும் சோடா பாட்டீல் வீசி சராமாரியாக தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது....

June 27, 2010

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நா டக மாநில அ.இ.அ.தி.மு.க. சார்பில்  பெ‌ங்களூரு‌வி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்‌‌க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா  அவர்கள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்பவில்லை. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாட்டிலேயே, இராணுவ முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மறுவாழ்வு...

June 20, 2010

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர்

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர் ஜெயலலிதா அவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும்,தமிழர்களின் பண்பாடி,சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள்,தமிழ் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் முலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற  முயற்சி நடப்பதாகவும் போரின் போது சிதந்து போன  தமிழர்களின் கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகள் ஆகியவற்றை கட்டி தர நடவடிக்கை எடுக்காமல் புத்த விகாரைகள்  புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்...

June 16, 2010

நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக கழக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, அவர்களது இல்லத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் ராஜா P.செந்தூர்பாண்டியன் நேரில் சந்தித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி நிதியாக" 40,78,800/_ (நாற்பது லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து எண்ணூறு) ரூபாயை வழங்கினார். ...

June 06, 2010

orkut - photos

orkut - pho...

June 03, 2010

ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்வில் ஜெயலலிதா அவர்கள் அதிரடி : மனோஜ் பாண்டியன், ராமலிங்கம் போட்டி

தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், கட்சியை விட்டு நீக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு பதிலடி கொடுக் கும் வகையில், கவுண்டர் இனத் தைச் சேர்ந்த மாவட்டச் செயலர் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். தமிழகத்திலிருந்து ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் இந்த மாதம் முடிகிறது. புது எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. தி.மு.க., சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேல், செல்வகணபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்...

June 01, 2010

திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்

புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்.இடம் :1ஆம் கேட் காந்தி சிலை முன்பு தேதி :05 .06 .2010 தலைமை : இரா.ஹென்றி அவர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் வரவேற்புரை : S.T கருணாநிதி அவர்கள் பேச்சாளர் சிறப்புரை : நெல்லை பாலாஜி அவர்கள் தீபொறி ஆறுமுகம் அவர்கள் தலைமை கழக பேச்சாளர் தலைமை கழக பேச்சாளர் பள்ளத்தூர் D .முருகேசன் மாவட்ட செயலாளர் நன்றயுரை: செ.ராஜா சிங் மாவட்ட தலைவர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்ட ஏற்பாடு : ...

February 26, 2010

புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள்

கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் மற்றும் புரட்சித்தலைவியின் ஆட்சியில் அரசின் சாதனைகளையும் தற்போதைய மைனாரிட்டி அரசின் அவலநிலையின் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாள் 25.02.2010 அன்று இரவு 7 மணிக்கு V.K புரம் மூன்று விளக்கு திடல் ல் மாவட்ட அம்மா பேரவை இனைச்செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்கள் தலைமையில் மற்றும் கழக கொடி எற்றி பின்பு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,ஏழை எளியோருக்கு வேஷ்டி,சேலை,குடம் வழங்கி சிறப்பித்தார்கள்.விழா ஏற்பாடுகளை நகர செயலாளர் திரு குமார் பாண்டியன் ,சிற்ப்புரை:KK கலைமணி அவர்கள்,மாவட்ட செயலாளர் ராஜா P செந்தூர் பாண்டியன் அவர்கள்,M.சக்திவேல்...

February 19, 2010

ரயில்வே சுரங்கப்பாதை பணி தேக்கம் சென்னையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் காகித வடிவில்தான் இருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு எதுத்துக்காட்டு வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு,மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது.இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா 2007ம் ஆண்டு நடந்தது.மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை இதனால் கணேஷ் நகர்,ஜானகிராம் நகர்,ரெட்டி காலனி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதுமட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாகத்துடன் திமுக அரசு ஒத்துழைப்பு...

February 16, 2010

பிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம்.

அரிசி,சர்க்கரை,பருப்பு,வகைகள்,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 ஆண்டாக ஏறிக் கொண்டே போகின்றன.இதனால் ஏழை,நடுத்தர மக்கள் அல்லல்படுகின்றனர்.தொடரும் மின்வெட்டு,மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழில் உற்ப்பத்தி குறைந்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில் வளர்ச்சிக்கும் எதிர் மறையான சூழ்நிலைபிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம். தமிழகத்தில் நிலவுகிறது.கொசுத் தொல்லை மக்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருக்கிறது.இதனால் புதுப்புது நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளதோடு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.மின்...

January 27, 2010

டெல்லி பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா பேட்டி

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 60வது ஆண்டு விழா 25.01.2010 அன்று நடந்தது.அந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டார் பின்னர் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அன்று மாலை சென்னை திரும்பினார்.அவரை ஓ.பன்னீர்செல்வம்,ஜெயகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:உங்கள் டெல்லி பயணம் எப்படி அமைந்தது?சிறப்பாகவும்,மகிழ்சி அளிப்பதாகவும் அமைந்தது.டெல்லியில் சோனியாவை சந்தித்து நீங்கள் பேசப் போவதாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியதே?தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் நானும்,சோனியாவும் பங்கேற்றோம்.அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம்...

January 15, 2010

அம்மா அவர்களுக்கு வாக்களியுங்கள்

வாக்களிக்க இங்கே சொடுக்கவும் http://www.whopopular.com/Jayalalithaa-ஜெயராம்...

January 14, 2010

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்கள்.

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்கள்அதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து செய்தி ;தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிற்க்ககூடிய இயற்கையை நேசிக்கும் விழாவாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஏழை எளியவர் என்ற பேதமோ,சாதி மத வித்தியாசமோ இல்லாமல் நன்றியுணர்வு என்ற இலக்கோடு கொண்டாடப்படும் நாள் பொங்கல் திருநாள்.உழைக்கும் மக்கள் தமக்கு உதவிய இயற்கைக்கும்,தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியை,மகிழ்ச்சியை தெரிவிக்கும் நாள் பொங்கல்.இந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள...

January 09, 2010

நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள்

திருநெல்வேலி : நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்....

January 08, 2010

மீனவர் சட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை [09.01.2010] அதிமுக ஆர்ப்பாட்டம்.

பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களை வரவேற்க்கும் வகையில் பாரம்பரிய மீனவர்களை நசுக்கும் வகையில் கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை வரைவு சட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.இந்த சட்டத்தின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.இந்த மசோதா ஒருபோதும் தாக்கல் செய்யப்படக்கூடாது என்பது அதிமுக வின் நிலைப்பாடு புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு அரசு சார்பில் கல் வீடும்,பழுதடைந்த வீடுகளை செப்பனிடுவதற்கு மானியமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அளிக்கப்படும்...

January 07, 2010

ஆளுநர் உரை அம்மா அறிக்கை.

ஆளுநர் உரை கடந்த நான்கான்டு உரைகளின் மறுபதிப்பாக அமைந்துள்ளதே தவிர தொலைநோக்கு திட்டங்கள் கொண்ட உரையாக அமையவில்லை.கருப்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ,2 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் லாரி வாடகை மற்றும் கட்டுமான ஊக்கத்தொகையுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1500ஜ மீண்டும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.காவிரி,பாலாறு,பொன்னையாறு பிரச்னைகளை தீர்ப்பது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.மீனவர்கள் நலனுக்கு எதிரான சட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்பட மாட்டாது என்ற உறுதிமொழி ஆளுநர் உரையில் இல்லாதது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை...

January 02, 2010

ஒய்வு பெற்றவர்களுக்கு வேலை வழங்கும் ஆணையை அரசு வாபஸ் பெற வேண்டும்

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர் அவர்களுக்கு பதில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.பொதுநலன் கருதி அரசு ஊழியர்களின் பணிகளை நீட்டிக்கவும்,மறு வேலை வாய்ப்பு அளிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு அதன் படி அரசு விரும்பினால் எந்த அரசு ஊழியரின் பனிக் காலத்தையும் நீட்டிக்கலாம்.ஆனால் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள இடங்களை ஒய்வு பெற்றவர்களை கொண்டு நியமிக்கலாம் என்று அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்ற அச்சாரமாக...

Pages 181234 »

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites